Pages

Saturday, May 7, 2011

உலகமெனும் மாமேடை

உலகமெனும் மாமேடையில் யாம் இசைச்சக்கரவர்த்திகள்

கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவியநாயகர்கள்

ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம் !

எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடைகள்

வேதனையும் விரக்தியும் தவிர இப்பூவுலகம் எமக்கு எதை அள்ளித்தந்தது

வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல் கொண்டு வெம்மைஒளி வீசுகிறதே !

எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்

எம்போன்ற கவிஞர்களால் அல்லாது வேறு எவரால் நிகழும் ?

சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்

மன்னுலகில் மாநகரங்கள் முளைக்கும் ;தழைக்கும் !

எம் வரையறையற்ற கற்பனை ராஜாங்கத்தால்

மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும் !

எம் வானவில் நிகர் வார்த்தை ஜாலங்களில் உள்ளது

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

மரித்துக்கொண்டிருக்கும் அரக்கனுக்கு CPR கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களாகத் தான் ஆப்பிள், பேஸ்புக், இண்டெல், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களைக் காண்கின்றேன்.தொழிற்சாலைகளெல்லாம் சைனாவுக்கும், பிறவேலைகளெல்லாம் BRIC-க்கும் போன பிறகும் இன்னும் அமெரிக்காவை ஜீவனோடு வைத்திருப்பது இது போன்ற இன்னோவேசன் தரும் நிறுவனங்களே.இந்த இன்னோ வேலைகளில் பெரும் பங்களிப்பு நம் ஊர்காரர்களுக்கும் இருக்கின்றது என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை.சமீபத்தில்கூட கூகிள் 25 மில்லியன்கள் கொடுத்து வாங்கிய PushLife.com-என்ற தளத்துக்கு சொந்தக்காரர் ஒரு இந்தியர்.ரே ரெட்டி பெயராம்(Ray Reddy).இவர் உருவாக்கிய PushLife என்ற மென்பொருள் கைப்பேசி டு கணினிக்கு பாடல்களை கடத்த/கையாள உதவுகின்றது. சீக்கிரத்தில் இதற்கு கூகிள் பெயிண்ட் அடிக்கப்பட்டு மார்கெட்டில் உலாத்தவிடப்படும். நாமெல்லாரும் பயன்படுத்துவோம்.

அது மாதிரியே ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?. இந்த Slingbox கொண்டு உங்கள் லிவிங் ஹால் டிவியை iPad,iPhone,iPod touch, Android, Windows Phone,BlackBerry,Palm OS,Symbian OS கைப்பேசியின் வழி எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம் Wi-Fi அல்லது 3G துணையோடு. இதை உருவாக்கிய Sling Media, Inc என்ற நிறுவனத்தை நிறுவியதும் ஷா,ரகு என்னும் இந்தியர்கள் தானாம்.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்


ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம்
இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,
அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்
••
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

சார் ஒன் மினிட்

*  Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப் படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரவுட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்
.


GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile) : இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங் களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

இன்ட்லியில் பிரபலமாவதற்கு எட்டு கட்டளைகள்

  1. முதலில் உங்கள் இடுகைகளை இன்ட்லியில் சமர்ப்பிக்க வேண்டும். 
  2. வேறொருவரின் இடுகைகளை கண்டிப்பாக காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள். 
  3. ஒவ்வொரு இடுகைகளுக்கும் பொருத்தமான தலைப்பு கொடுக்க வேண்டும் .
  4. அந்தந்த செய்திகளுக்கேற்ற பிரிவில் தான் இடுகைகளை சமர்பிக்க வேண்டும். 
  5. புதிய செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
  6. நல்ல இடுகைகளுக்கு தன்னலம் பாராமல் ஓட்டளிக்க வேண்டும். 
  7. உங்களுக்கு பிடித்த இடுகைகளுக்கு பின்னூட்டம் எழுதிப்பழகுங்கள். 
  8. நல்ல செய்திகளை மட்டுமே சமர்ப்பியுங்கள்.

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

உங்கள் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? 

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். 

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச்செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டேஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும்என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்றுநினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத்தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! 

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும்,மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. 

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும்உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. 

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச்சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. 

கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

எல்லோருமே மனம் நிரம்பி வழியும் கவலைகளோடு உலாவுகிறோம். யாராவது நம்மைக் காது கொடுத்து கேட்டாலே மனது திறந்து விடுகிறது. இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் கூடப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்று சொல்லும் நேரங்களில் எல்லாம் நாம்தான் அதிகம் பேசியிருப்போம். எதிராளி கேட்டுக் கொண்டிருந்திருப்பார்.




கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

பேசுபவரின் பொருளில் மனதை ஊன்றிக் கொள்ள வேண்டும். அவரது அனுபவத்தில் நாமும் மூழ்கிப் போய் அவரது உணர்வுகளை அனுபவிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் பேச ஆரம்பித்ததுமே, நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதிலேயே மூழ்கியிருக்கிறோமே ஒழிய அவரது பேச்சில் கவனம் இருப்பதில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...