Pages

Sunday, May 8, 2011

காதல் பற்றி என்னுடைய கருத்து.

      40 லட்சம் வருடங்களுக்கு முன்தான் ஆப்ரிக்க சமவெளியில் காதல் பிறந்தது. அப்போது தான் முதல் மூளையில் ந்யூரோ கெமிக்கல் மனித ரத்தத்தில் பாய்ந்து, காதலின் காரணத்தால் அசட்டு சிரிப்பும் வியர்வையும் ஏற்பட்டது.
              காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞான கருவிகளால் அளக்க முடியும். ஆனால் காதல்???

      அதன் அடையாளங்கள் குழப்பமானவை. அஜீரணமாக இருக்கலாம். பைத்தியமாக இருக்கலாம். காதலுக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் தேடுவது குழப்பமாக இருந்தது.

         காதலிக்கும்போது, கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போது மூளையிலிருந்து amphetamines , Dopamine , norepinephrine , குறிப்பாக phenylethylamine , போன்ற ரசாயன பொருட்கள் ரத்தத்தில் பாய்கின்றன. காதலும் பதற்றமும் ஒன்று  போல் அறிந்தனர். காரணம் இரண்டு உணர்வுகளின் போதும் இந்த கெமிக்கல் தான் ரத்தத்தில் கலக்கின்றன.

         காதல் என்பது இயற்கை தரும் போதை. போக போக இந்த ethylamines பழகிப்போக,  ஒரு வாரத்திற்குப்பின் காதலியை தொட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கை அருகே செல்ல வேண்டியிருக்கிறது. இவை எல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால் வேறு நபரிடம் காதல் செய்வதால் தான் இந்த கெமிக்கல்கள் மீண்டும் சுரக்கிறது. இருந்தும்  பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம் வேறு வகை கெமிக்கல்ஸ்.

         மூளையில் ENDORPHIN என்றொரு மற்றொரு கெமிக்கல் சுரந்து காதலை நீட்டிக்க வைக்கிறது.

        OXYTOCIN என்னும் பொருள் கூட காதலுக்கு காரணம். நரம்பை நிரடி தசைகளை சுருக்குகிறது. பெண்களிடம் இதே கெமிக்கல் தான் யூட்டிரஸ் சுருங்கவும், முலைப்பால் சுரக்கவும், காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறது.

        ஆண் பெண் சேர்க்கையின்போது இருவர் உடலிலும் OXYTOCIN அளவு 3 முதல் 5 சதவீதம் அதிகரிக்கிறது. கடைசி கட்ட வாண வேடிக்கைக்கேல்லாம் காரணம் இதே OXYTOCIN தான்.

        மேற்கத்திய நாகரீகத்தில் நான்கு வருடத்திற்குப்பின் தான் இல்வாழ்வில் முதல் அலுப்புகள் தோன்றுகின்றன. திருமணமாகி நான்கு வருடத்தை நெருங்குபவர்கள் குழந்தை பெற்று கொள்ளலாம். இன்னும் நான்கு ஆண்டுகள் காதல் தாங்கும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5 சதவீதம் ஜீவராசிக்குதான். மனிதர்கள் பொதுவாக ஒருத்தி, சிலவேளை மற்றொருத்தி என்ற கொள்கையைத்தான் கடை பிடிக்கிறார்கள். இந்த ''சிலவேளை''  மற்றொருத்திக்கு காரணம் ஜீன்களின் புதிய சேர்க்கைகளை முயன்றுபார்த்து அடுத்த தலைமுறைக்கு சிறப்பான தலைமுறைகளை உண்டாக்கும் தேவைதான்.

         HOMOSEX - க்கு ஆதார காரணம் காதல்தான்  என்றாலும் பிறப்பின் போது ஏற்பட்ட சில BIOCHEMICAL TROUBLE தான் காரணம்.

          இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குத்தான் தயார் செய்து வைத்திருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனதின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகி இருக்கிறார்கள். தனிப்பட்ட காதல் வரைபடம்.  (PERSONAL ROMANTIC NEUROGRAPH) இந்த உருவம் ஆரம்ப காலத்தில் நம் அடிமனதில் உருவாகிறது.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க-    நியாயமான ஒரு கேள்வி ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டுபந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே ?

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.  
நானும் விவரிக்க ஆரம்பிதேன் வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும் அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

து சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
இந்த மாதிரி அமெரிக்கால்-ல இங்கிலாந்து-ல இருக்குற இல்ல எதாவது கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

சரி" இந்த மாதிரி >Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும் முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!


      அது 2005-ம் ஆண்டு. வீல்சியாரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சியாரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கொம்ப்யூட்டரும், வொய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டோக் ஷோ  நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

      ‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.

பொன்னியின் செல்வனுக்கு கல்கி எழுதிய முடிவுரை


நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றரை ஆண்டு காலம் "பொன்னியின் செல்வன்" கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.
கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப்பெயர்கள் சிலருக்கு பெரிதும் தலைவேதனையை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்தத் தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர் கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் படித்ததில்லை என்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.
கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் தினத்தில் பரமக்குடியிலிருந்த பல நண்பர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். "பொன்னியின் செல்வன்" முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீர நாராயண ஏரிக் கரையில் தொடங்குகிறது அல்லவா?
பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதி பகுதியாக நிர்மாணித்து வருகின்றார்கள்.

பிரியமுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு


நான் இன்னும் இருபதை எட்டாதவன். கைக்கு கிடைத்த புத்தகங்களை படித்து " மார்க்ஸியம் என்றால் என்ன? அதன் இலட்சியம் என்ன? அதன் தேவை என்ன?" போன்ற அடிப்படையை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சாமான்ய இளைஞன். பொதுவாகவே கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின்.ஸ்டாலின்,மா சே துங் காஸ்ட்ரோ இவர்களைத்தாண்டி எவரும் என் நினைவுக்கு வருவதில்லை.கம்யூனிஸத்தின் சாதனைகள்,வெற்றிகள்,எல்லாம் சோவியத்திலும் கியூபாவிலும் மட்டுமே நடந்தாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.எனக்கு மட்டும் அல்ல இங்கு பலரது நிலைமை இதுதான்.சமீபத்தில் படித்த சில புத்தகங்கள் சில பெரும் தலைவர்களை அடையாளம் காட்டியது. சிங்காரவேலர்,ஜீவா,வி.பி.சிந்தன்,பி.இராமமூர்த்தி,எ.எம்.எஸ், ஜோதிபாசு, சங்கரய்யா என அந்த நீண்ட பட்டியலை வாசிக்கும் போது உண்மையிலேயே இவ்வளவு பேர் இந்தியாவில் கம்யூனிஸ கொள்கையை உள்வாங்கி அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களா? என ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொள்கிறது. தல்வார் போராட்டம்,தெலுங்கானா புரட்சி என படித்த போது மெய்சிலிர்த்துப் போனேன்.தோழர் பாலுவின் தூக்குமேடை நிமிடங்களிலும் அவரது கொள்கைப்பிடிப்பு வீச்சுரைகளால் உணர்ச்சிமேலீட்டில் என் கண்களில் இருந்து நீர் வழிந்தது.அது அழுகை அல்ல என்பதை மட்டும் நன்றாய் உணர்ந்திருந்தேன்.

                                        "வெள்ளைக்காரன் சுதந்திரம் தர நினைக்கும் போது மூன்று கட்சள் தான் இருந்தன. முதலவதா வந்த காங்கிரசுக்கு இந்தா இந்தியா என்றான்.இரண்டாவதாக் வந்த முஸ்லீம் லீக்கிற்கு இந்தா பாகிஸ்தான் என்றான்.மூன்றாவதாய் வந்த கம்யூனிஸ்ட்டுக்கு இந்தா சிறைச்சாலை என்றான்".என்றும் ஜீவா முதலானோர் ஒழிந்து மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததைப் பற்றியும் எங்கள் ஊர் டீக்கடியில் அமர்ந்து சில தோழர்கள் பேசியதை கேட்டிருக்கிறேன்.அவ்வளவு முன்னரே வந்துவிட்ட கட்சி ஏன் இன்னும் வளரவில்லை?என்ற கேள்வி இயல்பிலேயே மனதில் எழும் ஆனாலும் அது குறித்து தீவிரமாக் யோசிக்கும் வயது அப்போது எனக்கு இல்லை.

                   எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, ஞாயிறு விடுமுறை,சாப்பாட்டுக்கு இடைவேளை,போனஸ்,சம்பள உயர்வு என பலவற்றை சாதித்த கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளர்கள் தூக்கி கொண்டாடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?. ஒருசமயம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்த கட்சி இப்படி நொடிந்து போனது ஏன்? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான் நாம் அந்நியப்பட்டு போய்விட்டோம் தோழர்களே.இன்னும் நாம் பலரது கண்களுக்கு டப்பா குலுக்கிகளாகவே தெரிகிறோம். ரத்தன் டாட்டா எல்லா கட்ச்சிகளுக்கும் பணம் அனுப்பிய போது "இது ஏழையின் கட்சி உனது முத்லாலித்துவ பணம் வேண்டாம்"என் திருப்பித் தந்தது கம்யூனிஸ்ட் கட்சி என்று தோழர்கள் மார்த்தட்டி சொல்வது உண்டு.நமது கொள்கைகளைப் பற்றி பணக்காரர்களுக்கு புரியவைப்பதில் வெற்றி அடைந்திருக்கும் நாம் அதை ஏழைகளிடம் கொன்டு சேர்ப்பதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறோம்.உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை கட்சிக்குள் இருக்கும் பலருக்கே கம்யூனிஸ சித்தாந்தததில் சரியான புரிதல் இல்லை.களப்பணி ஆற்றுவது மிகவும் முக்கியமெனினும் சித்தாந்தத்தில் தெளிவில்லாமல் களப்பணி ஆற்றுவது என்பது சரியானது அல்ல.முன்பு போல் இல்லை இப்போழுது பெரும்பாலானோர் தங்கள் சுயநலத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.பொதுநல எண்ணத்தோடு வரும் சொச்சப் பேரையாவது சரியான வழியில் திருப்பிவிடுவது நமது கடமை ஆகும்.எது நமது சித்தாந்தம் என்பதிலேயே நமக்கு குழப்பம் இருக்கிறதோ எனப்பயப்படுகிறேன்.

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்


1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

சாந்தோமின் வரலாறு


இந்நாட்களில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் இரண்டு பெயர்களும் ஒரே பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால அந்நாட்களில் இப்பெயர்கள் இரண்டும் இரண்டு வித்தியாசமான இடங்களைக் குறிப்பிடும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இலங்கி வரும் ஊராகக் கருதப்படும் மைலாப்பூர், மிகப் பழமையான இந்திய ஊர். சாந்தோம் பதினேழாம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய அமைவிடம். செயிண்ட் தாமஸ் தி அபோஸ்டல் மயிலையில் தான் புதைக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. போர்த்க்துக்கீசியர்கள் முதலில் இந்தியா வந்த போது, அவர்களுள் சிலர் மயிலைக்கு அவரது மிச்சங்களைப் பார்க்க வந்தனர்.
அவர்கள் சில பாழடைந்த கிறித்துவ ஆலயங்களையும், செய்ண்ட் தாமஸ் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தையும் கண்டனர்.

விரைவில் அந்த இடத்தில் ஒரு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு போர்த்துக்கீசிய நகரம் வளர்ந்தது. காலப்போக்கில் அந்த நகரம் ஒரு வணிபப் பகுதியாக மாற, கோட்டை மதிலால் சூழப்பட்டு, இந்திய நகரமான மயிலாப்பூருக்கு இணையாக மாறியது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஒரு இத்தாலிய வணிகர், சாந்தோமைப் பற்றி 'நிலத்தின் மேல் தான் கண்டவற்றுள் அழகிய நகரம்' போல் இருந்ததாகவும், மயிலாப்பூர் களிமண் சுவரால் சூழப்பட்ட ஒரு இந்திய நகரமாகவும் குறிப்பிடுகிறார்.

ஆகாவே மயிலாப்பூர் சாந்தோமின் கறுப்புப் பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் இரண்டும் ஒன்றிணைந்தன.

ப்ரிட்டிஷார் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போதே, போர்த்துக்கீசியரின் பலம் குன்றத் தொடங்கி இருந்தது; மற்றும் அவர்களது செல்வாக்கு வளர வளர, போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் சாந்தோமில் மேலும் குறையக் காரணமாக இருந்தது.; அதன் இயல்பான பின் நிகழ்வாக மயிலாப்பூரை உள்ளடக்கிய சாந்தோம் அவர்களது ஆக்ரமிப்பிற்கு ஆளாகியது.
Related Posts Plugin for WordPress, Blogger...