Pages

Wednesday, May 11, 2011

ப்ரௌசருக்குள் எத்தனை ப்ரௌசரடி!!!


ஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள். உடனே என்ன செய்வீர்கள்? அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன.
கூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம்https://addons.mozilla.org/enUS/firefox/ addon/8740?src=oftenusedwith என்ற முகவரியிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கானதுhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/1429?src= oftenusedwith என்ற முகவரியிலும், சபாரிக்கான புரோகிராம் https://addons.mozilla.org/enUS/firefox/ addon/6438?src=oftenusedwith என்ற முகவரியிலும், ஆப்பராவிற்கான புரோகிராம்https://addons.mozilla. org/enUS/firefox/addon/1 190?src=oftenusedwith என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.

வந்து விட்டது “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு


உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சரியான உடல் அமைப்பைப் பெறுவது இத்தனை எளிதா?

மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியம் இல்லை... அறுவை சிகிச்சை தேவை இல்லை... வலி இல்லை... தழும்பு இல்லை... உணவுக் கட்டுப்பாடு இல்லை என்பதுபோன்று ஏகப்பட்ட 'இல்லை’களுடன் அறிமுகம் ஆகி இருக்கிறது செரோனா பாடி லிப்போ சிகிச்சை! அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேசர் சிகிச்சை, இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது. இந்தக் கருவியை, சென்னை, தி.நகரில் உள்ள லைஃப் அலைவ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதனுடன் இணைந்த, புதிய மெடிக்கல் வெயிட் லாஸ் முறையும் அறிமுகம். 

இதுகுறித்து, டாக்டர் சுனிதா ரவி சொல்கிறார்.

''உடல் எடை கூடுவது, இன்றைய உலகில் மனிதனுக்கு மிகப் பெரிய பிரச்னையாக, கவலையாக உள்ளது. உடல் எடை திடீரென்று ஒரே நாளில் அதிகரித்துவிடுவது இல்லை. ஆனால், உடல் எடை குறைப்பு மட்டும் ஒரு சில நாளில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்காகப் பல்வேறு உடல் எடைக் குறைப்பு முறைகளை மேற்கொள்கின்றனர்.

ஜிம்முக்குச் சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, ஓரளவு எடையைக் குறைக்கிறார்கள். உடல் எடை குறைந்ததும், 'ஆஹா சாதித்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் பயிற்சியை நிறுத்துகிறார்கள். அதனால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கிறது. பல நேரங்களில் உடல் எடையைக் குறைக்கிறோம் என்ற பெயரில், புரதம் மற்றும் ஊட்டச் சத்துகளை வெளியேற்றிவிடுகிறார்கள். கொழுப்பைக் குறைக்கிறோம் என்று, உடலில் உள்ள நல்ல கொழுப்புகளையும் வெளியேற்றி விடுகிறார்கள். இதனால் வேறு சில பாதிப்புகளும் உடலுக்கு ஏற்படுகிறது.

விண்டோஸ் 7 ப்ராடக்ட் கீ


விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும்.


இந்த தொல்லையிலிருந்து எப்படி மீள்வது? ஒரிஜினல் சிடியோ அல்லது ஒரிஜினல் போல காப்பி எடுத்த, நிறுவனங்கள் வழங்கிய சிடியோ இருக்கும் வரை, இந்த ப்ராடக்ட் கீயை அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?


32 வயதுப் பெண்மணி ஒருவர் கூறுகையில், `நான் தாம்பத்ய தொடர்பை அதிகம் விரும்புபவள் தான். ஆனால் 12 மணி நேர தொடர்வேலையால் சோர்ந்து போகிறேன். மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது. கணவரும் கூட என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அதனால் 30 வயதுக்குப் பிறகு அதன் மீதான எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியது. அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்றார்.


சர்வேயின்போது ஒரு இளம் குடும்பத்தலைவியின் ஏக்கம் நிறைந்த பதில் இது. “நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது”
இதுபற்றி டாக்டர் ஷா கூறுகையில், `30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கிறார்.
இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது.
40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.

முதலிரவு கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா ??


ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.
* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.
*முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும்???


பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?


* சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

* காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோpடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
* செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.

"அது" பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்.

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.

"அதை"முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும்

ஒவ்வொருவருக்கும் 'ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்' இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.


இது செக்ஸ் உறவின்போது கூட நிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம்.

இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன.

34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம். 

ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாணாக போஸ் தரத் தயார்

ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாணாக போஸ் தரத் தயார் என ஆடவர் பத்திரிக்கையான எப்எச்எம்மிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யானா குப்தா.

இந்தித் திரையுலகில் கவர்ச்சிப் பதுமையாக நடமாடி வரும் இந்த செக் அழகியின் டாப்லெஸ் படம் விரைவில் எப்எச்எம்மில் வெளியாகவுள்ளது. மே மாத இதழுக்காக இந்த டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் யானா.

ஆனால் எப்எச்எம் அவரை கவர்ச்சிப் படத்திற்காக அணுகியபோது, டாப்லெஸ் எதற்கு, முழு நிர்வாணமாகவே போஸ் தருகிறேன் என்று கூறி பெரிய தொகையாக கூறியுள்ளார்.

அதைக் கேட்டு மலைத்துப் போன எப்எச்எம், அய்யோ, எங்களால் அவ்வளவு தர முடியாது என்று கூறி ஜகா வாங்கி விட்டதாம். இதையடுத்துதான் டாப்லெஸ் படத்திற்கு போஸ் கொடுத்தாராம் யானா. இந்தப் போஸுக்காக ரூ. 15 லட்சம் வாங்கியுள்ளாராம் யானா.

சில காலத்திற்கு முன்பு பாண்டீஸ் அணியாமல் வந்து பரபரப்பையும், கிறுகிறுப்பையும் ஏற்படுத்தியவர்தான் யானா. அதன் பிறகு அவரது கவர்ச்சிக்கு புது கிராக்கி கூடி விட்டது. இதையடுத்தே அவரை எப்எச்எம் அணுகியது.

Tuesday, May 10, 2011

விண்டோஸ் விஸ்டாவும் ஒசாமா கொலைவழக்கும்


புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் நவீன வசதிகளை மக்களுக்குப் பயன்படுத்தத் தர வேண்டும் என்ற நோக்கத்தில், புதிய கட்டமைப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மற்றும் 10 உருவாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதால், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தராமல் இருக்கக் கூடாது. அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 
தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ, விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிற் கேற்றபடி மைக்ரோசாப்ட் வடிவமைக் கவில்லை. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் மட்டுமே இயங்கும்படி அமைத்துள்ளது. பலர் இது பற்றி குறை கூறிய பின்னரும், அது அப்படித்தான் என்று அறிவித்துள்ளது.
இப்போது இன்னொரு செய்தியும் வந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விஸ்டாவில் கூட இயங்காது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிமை அழகிகள்

(முதலாளித்துவத்தின் அகோர பசிக்கு இரையாக ஆண்டுதோரும் எஜமானிய விசுவாசமிக்க நாடுகளில் ஒன்று கூடும் உலக அழகிகள் பற்றி – அதன் நோக்கம் பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை)

உலக வர்த்தக சந்தையில் தட்டுப்பாடற்ற பொருளாகவும், நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் கவர்ச்சிப் பொருளாகவும் பெண் மாற்றப்பட்டு வருகிறாள். நல்ல வருமான உத்தியின் குறியீடாக ஆரம்பக் காலம் தொட்டே கருதப்பட்டு வருபவள் பெண்.

நில பிரபுகள் – பண்ணையார்கள் காலம் தொட்டு இன்றைய உலக மயமாக்கள் சிந்தனை வரை மாறா வருமான நியதியுடன் பல்லிளித்து நிற்பவள் பெண் தான். காலகட்டங்கள் – யுகங்கள் மாறினாலும் முதலாளித்துவ சிந்தனைவாதிகளின் மனநிலை மட்டும் மாறுவதேயில்லை.

அந்தபுரத்தை அலங்கரித்தல், வித – விதமான உடை, முடி அலங்காரங்களுடன் விருந்தினருக்கு மத்தியில் ஆடி அசர வைத்தல் என்று நில பிரபுகளின் காலத்தில் துவங்கிய அழகிப் போட்டி தன் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் விரிவாக்கிக் கொண்டுள்ளது.

உலகமயமாக்களில் அழகிப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. உலகமயமாக்களின் தத்துவம் என்ன? மிக சொற்பமான மக்களிடம் முடங்கிக் கிடக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களை எடுத்து அல்லது சொத்துக்களுக்குறிய வரியை கண்டிப்புடன் பிடுங்கி உலகிற்கு பகிர்ந்தளித்து வறுமையை விரட்டுவதா… நிச்சயமாக இல்லை. தாம் தயாரிக்கும் செயற்கை சாதனங்களை (கார் போன்ற பெரிய பொருளிலிருந்து ஐப்ரோ, ஊக்கு போன்ற அற்ப பொருள்கள் வரை) உலக அளவில் விற்பனை செய்து மேலும் மேலும் பணம் குவிப்பதே உலகமயமாக்களாகும். இந்த விற்பனை உலக அளவில் கலைகட்ட உலக அழகி? தன் உடலால் உதவுகிறாள்.
Related Posts Plugin for WordPress, Blogger...